கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா தேசியக் கொடியேற்று விழா: பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருக்குப் பாராட்டு!



கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா இன்று ஜன.26 தேசியக் கொடியேற்று விழா மிகச் சிறப்பான முறையிலும், எழுச்சியுடனும் நடைபெற்றது.

விழாத் தொடக்கம்
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களைத் தலைமை ஆசிரியர் இன்முகத்தோடு வரவேற்று தலைமையுரையாற்றினார்.

தேசியக் கொடியேற்றம்
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, ஊர் ஜமாத் துணைத் தலைவர் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, ஊர் ஜமாத் இமாம் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றுகையில், தேசப்பற்று மற்றும் கல்வி வளர்ச்சியின் அவசியம் குறித்து எழுச்சியூட்டும் வகையில் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு கௌரவிப்பு
பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர் சாதிக் பாட்ஷா அவர்களுக்கு, அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டி பள்ளி நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டது.


மேலும், பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பின்ணணியாக இருந்து உறுதுணை புரிந்து வரும் ஊர் ஜமாத் நிர்வாகிகளுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நன்றியுரை
விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவிகளின் பேச்சு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசப்பற்றை வலியுறுத்தும் பாடல்கள் மற்றும் நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஆசிரியர் சாகுல் ஹமீது அவர்கள் சிறப்புரையாற்றி, விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்தார். இறுதியாக, அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் இசைக்க, விழா இனிதே நிறைவுற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments