புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவரும், இணைப்பதிவாளருமான எம்.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் நியாய விலைக் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, புதுக்கோட்டை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வருகிற 14-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடக்கிறது.
நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம், தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து விவரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் கிடைக்க பெறாத விண்ணப்பதாரர்கள் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அன்னவாசல் சாலை, புதுக்கோட்டை என்ற முகவரியில் உள்ள தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வருகை புரிந்து விவரங்களை அறிந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.