விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சாலை மறியல் மற்றும் நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்தனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதைத் தொடர்ந்து இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நீதிமன்றம் முன்பு புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்து திடீரென சாலை மறியலிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க கோரியும் அவர்களைப் பாதுகாக்க கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மேலும் இன்று ஒருநாள் நீதிமன்றத்தில் வழக்காடாமல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று நடைபெற இருந்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.