கந்தர்வகோட்டை அருகில் உள்ள அண்டனூர் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் பாலமுருகன். இவர் ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது ஊர் கிராம ஊராட்சி ஆக இருப்பதால் பல்வேறு காரணங்களினால் ஊராட்சியின் மூலம் வினியோகம் செய்யப்படுகின்ற குடிதண்ணீர் எந்த நேரத்தில் வரும் என்பது தெரியாத நிலை இருந்தது. சில நேரங்களிலும், இரவு நேரங்களிலும் தண்ணீர் வருவது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் வீட்டு வாசலில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும்.
இதனை கண்ட அறிவியல் ஆசிரியர் தண்ணீர் வீணாவதை தடுக்க என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது தண்ணீர் குழாயை மூடுவதற்கு பயன்படுத்தப்படும் மூடியில் சிறு துளையிட்டு அதில் ஒரு விசிலை பொருத்தினார். தண்ணீர் வருவதற்கு முன் குழாயில் காற்று நிரம்பி இருக்கும். இந்த விசில் பொருத்திய மூடியை குழாயில் போட்டு மூடி விட்டாள் குழாயில் தண்ணீர் வந்தவுடன் அதில் உள்ள காற்று வெளியேறி விசில் அடிக்க ஆரம்பித்து விடும். இப்போது தண்ணீர் வரப்போவதை நாம் அறிந்துகொள்ள முடியும் இதன் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும். இந்த எளிமையான கருவியை கண்டுபிடித்த அறிவியல் ஆசிரியர் பாலமுருகனை சக ஆசிரியர்களும் பொதுமக்களும் பாராட்டினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.