கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் விசைப்படகு மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்கள் மாயமானார்கள். இதனிடையே தேடும் பணியை துரிதப்படுத்த கோரி அப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மெசியா (வயது 30), நாகராஜ் (52), சாம் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு நடுக்கடலில் மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகின் மீது மோதி விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் படகின் பின்புறம் சேதம் அடைந்து தண்ணீர் புகுந்தது.
இதனை அறிந்த மீனவர்கள் இது குறித்து வாக்கி டாக்கி மூலம் மற்ற மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் இலங்கை கடற்படையினர் இருந்ததால் அப்பகுதிக்குள் மற்ற மீனவர்கள் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதனிடையே அந்த மீனவர்களையும், விசைப்படகையும் காணவில்லை. அந்த படகு கடலில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதில் சென்ற மீனவர்களின் கதி என்ன? என்ற விவரம் தெரியவில்லை. மற்ற மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் 3 விசைப்படகில் 12 மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை தேடி கடலுக்குள் சென்றனர். ஆனால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
எனவே மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறி மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லமாட்டார்கள் என்று மீனவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.