புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 48 ஆயிரத்து 964 ஆகும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புமுறை சுருக்கத் திருத்தம்-2021-க்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 376 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 83 ஆயிரத்து 516 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 72 பேரும் என மொத்தம் 13 லட்சத்து 48 ஆயிரத்து 964 வாக்காளர்கள் 2021-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரத்து 68 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அதன்பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற 2021-ம் ஆண்டிற்கான சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின்போது 24 ஆயிரத்து 384 ஆண் வாக்காளர்கள், 28 ஆயிரத்து 728 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தம் 53 ஆயிரத்து 124 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின் போது ஆண் வாக்காளர்கள் 7 ஆயிரத்து781 பேரும், பெண் வாக்காளர்கள் 6 ஆயிரத்து 443 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் சேர்த்து மொத்தம் 14 ஆயிரத்து 228 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 6,375 வாக்காளர்கள் முகவரி மாற்றம் செய்துள்ளனர். ஒரே தொகுதிக்குள் மொத்தம் 3,019 வாக்காளர்கள் இடம் மாற்றம் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,547 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையை பிரிக்க கூறப்பட்டுள்ளது. இதில் 461 வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போதுமான அளவு உள்ளன. முதல் கட்டமாக சோதனை முடிவடைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்லைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 843 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுடைய 33 ஆயிரத்து 200 இளம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.