மீமிசலில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மீமிசல் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மீமிசல் இன்ஸ்பெக்டர் (பொ) சாமுவேல்ஞானம் தலைமையில் போலீசார், ஏம்பக்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகப்படுமாறு நின்று கொண்டிருந்த மீமிசலை சேர்ந்த மகேஷ் (49), ஏம்பக்கோட்டையை சேர்ந்த கோதண்டராமன் (56), பேராவூரணி அடுத்த நாடியத்தை சேர்ந்த ராமலிங்கம் (47) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 3 பேரும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அங்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.