சென்னை: வாக்காளர் அடையாள அட்டைகளை, வீடுகளுக்கு அனுப்பும் திட்டத்துக்காக அஞ்சல் துறையிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு வாக்காளர் அட்டை அனுப்பும் திட்டம்: அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம்!
வீடு தேடி வாக்காளர் அட்டைகள் அனுப்பும் திட்டத்தை சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வீடுகளுக்கு அனுப்பும் திட்டத்தில், தபால் துறையிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும், இதற்காக 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பான் கார்டு எப்படி வீடு தேடி வருமோ அதுபோல ஓட்டர் கார்டும் வீடு தேடி வரும் என்றார். ஒருவேளை ஓட்டர் அடையாள அட்டை திரும்பி வந்தால் அட்ரஸ் மாறிவிட்டதா என்பது போன்ற சோதனைகள் செய்யப்படும் என்றார் தலைமை தேர்தல் அதிகாரி.
தமிழகத்தில், இதுவரை 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 பேர் முதல் முறை வாக்காளர்களாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களுக்கும் அவர்கள் விண்ணப்பித்தால், அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டை வீடுகளுக்கே அனுப்பப்படும். இவ்வாறு சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.