கடலோர மீனவர் பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் ஊராட்சி நிர்வாகம் குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கடலோர பகுதி மீனவர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் கிராம கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மணமேல்குடி தனியார் மண்டபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்தப் பயிற்சியில் அந்தந்த ஊராட்சியில் எவ்வாறு செயல்பட வேண்டும்.மீனவர்களுக்கு உண்டான பிரச்சனைகளை திறம்பட எவ்வாறு தீர்ப்பது போன்ற பயிற்சிகளும் ஆறு தலைப்புகளில் அவர்களுக்கு உள்ளாட்சி என்ற புத்தகங்களும் வழங்கப்பட்டது
அந்தப் புத்தகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உரிமைகள் மற்றும் கடமைகள் கிராமசபை வலிமைப்படுத்துதல் கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்கும் முறைகள் நிதி வளம் மற்றும் கணக்குகளை பராமரிக்கும் முறைகள் அரசு திட்டங்கள் மற்றும் அணுகுமுறைகள் உள்ளாட்சி குழுக்கள் என ஆறு தலைப்புகளில் அவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியினை கிராம கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் கிராம பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மற்றும் மணமேல்குடி மக்கள் சமூக சேவை மையம் மற்றும் ரொஸ் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.