புதுக்கோட்டை மாவட்டம், ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் வரவிருக்கும் பொதுத்தேர்வைச் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் வழிகாட்டுதலின்படி, ஒக்கூர் முன்னாள் மாணவ-மாணவிகள் சார்பில் இந்த நற்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்குப் ஊக்கமளிக்கும் விதமாக பேனா, பென்சில் மற்றும் தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளன.
நிகழ்ச்சி விவரம்
நாள்: பிப்ரவரி 16, 2026
நேரம்: காலை 10.00 மணியளவில்
இடம்:ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம்
இந்த விழாவில் ஒக்கூர் மற்றும் ஒக்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் முன்னாள் மாணவ-மாணவிகள், ஒக்கூர் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.