மீமிசலில் நாளை (20/02/2021) நடைபெறும் முஹம்மது நபி யார்? (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) விளக்க கூட்டம் கலந்து கொள்ள அழைப்பு!!!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் கடற்கரை வட்டார உலமா சபை, அல்-இஸ்லாஹ் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் ஐக்கிய ஜமாஅத் இணைந்து நடத்தும் முஹம்மது நபி யார்? (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) விளக்க கூட்டம் மீமிசல் கடை வீதியில் நாளை சனிக்கிழமை (20/02/2021) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த விளக்க கூட்டத்தில்

சிறப்புரை 1:

சிவத்திரு.திருவடிக் குடில் சுவாமிகள் நிறுவனர் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் - கும்பகோனம்

தலைப்பு: ஆளுமை மிக்க முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)

சிறப்புரை 2:

மௌலனா அல்ஹாஜ். A.அப்துல் அஜீஸ் பாக்கவி தலைமை இமாம் கரும்பு கடை சுன்னத் ஜமாஅத் பள்ளி - கோவை, துணை செயலாளர் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தமிழ்நாடு.

தலைப்பு: முஹம்மது நபியின் பலதா திருமணம் ஏன்?

ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இந்த விளக்க்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கடற்கரை வட்டார உலமா சபை, அல்-இஸ்லாஹ் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் ஐக்கிய ஜமாஅத் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும்  ஊரில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு கடற்கரை வட்டார உலமா சபை, அல்-இஸ்லாஹ் பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் ஐக்கிய ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments