புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கொளுத்தும் வெயிலில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதிய குழுவில் அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். போராட்டத்தை தொடங்கி வைத்து சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா பேசினார். மாநில பொருளாளர் தேவமணி கோரிக்கைகள் குறித்து பேசினார்.
காத்திருப்பு போராட்டத்திற்கு சாமியானா பந்தல் போட போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்திருந்தனர். பலர் சேலையால் தலையை மூடியபடி அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் குடையை பிடித்தப்படியும், துண்டால் தலையை மூடியபடியும், துணிப்பையை தலையில் வைத்தும் அமர்ந்திருந்தது பரிதாபமாக இருந்தது. ஒரு சிலர் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.