மாநில நீச்சல், தடகள போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சாதனை.!



புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல், தடகள போட்டியில் பங்கேற்றனர்.

இதில் தங்கம், வெள்ளி உள்பட மொத்தம் 29 பதக்கங்கள் பெற்றனர். மேலும் நீச்சல் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் 2-ம் இடம் பிடித்தனர். சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் உமாமகேஸ்வரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் வீரர்களை அவர் வாழ்த்தினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments