இந்திய அஞ்சல் துறை நடத்தும் ஆதார் சிறப்பு முகாம் மீமிசல் அஞ்சலகத்தில் நேற்று 22.02.2021 முதல் துவங்கி வருகிற 27.02.2021 வரை ஆறு நாட்கள் நடக்கிறது.
இந்த முகாமில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, புதிதாக ஆதார் அட்டை எடுத்தல் மற்றும் முகவரி மாற்றம், பிறந்த தேதியில் திருத்தம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி சேர்த்தல் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். புதிய ஆதார் அட்டை எடுக்க கட்டணம் இல்லை.
ஐந்து வயது, 15 வயது முடிந்து, கைரேகை, கண் கருவிழிகளை புதிதாக பதிவு செய்பவர்கள், கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற வயதினர், நூறு ரூபாய் செலுத்த வேண்டும். இதர சேவைகளுக்கு, 50 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இந்த அரிய வாய்ப்பை கோபாலப்பட்டிணம், மீமிசல், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டிணம், அரசநகரிப்பட்டினம், பொன்னமங்கலம், பாதரக்குடி, முத்துக்குடா, பொய்யாதநல்லூர், கிழஏம்பல், செய்யானம், குமரப்பன்வயல் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு
சம்பந்தப்பட்டவர்கள் நேரடியா செல்லவும்.
முகவரி மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் ஏதாவது ஒன்று பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அட்டை, வாக்காளர் அட்டை , ஓட்டுனர் உரிமம்,
சமையல் எரிவாயு ரசீது, வங்கி புத்தகம், ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
5-வயது குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.