புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி நேற்று செய்தி யாளர்களிடம் கூறியது:
அதிமுகவை தற்போது நி நிர்வகித்து வரும் நிர்வாகிகள் சர்வாதிகாரிகளைப்போல செயல்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட் பாளர்களை உள்ளூர் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை.
தேர்தல் பிரச்சாரத்துக்காக அறந்தாங்கி வந்த தமிழக முதல்வர் பழனிசாமி, என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நான் கேட்ட எந்த கேள்விக்கும் முறையாக அவர் பதில் சொல்லவில்லை.
அமமுகவுக்கு சென்று ஆதரவு தெரிவித்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் யாருக்கும் இந்தமுறை வாய்ப்பளிக்க வில்லை.
வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அறந்தாங்கி உட்பட குளறுபடியான தொகுதிகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்றிவிட்டு, மக்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், விராலிமலை முருகன் கோயிலில் தொடங்கி, கோடியக்கரை வரை பொது மக்களிடம் நீதி கேட்டு வாகனப் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள 6 தொகுதிகளிலும் இந்த தேர்தலில் அதிமுக தோல்வி யுற்றால், அதற்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கரே முழுக் கார ணம் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.