அறந்தாங்கியில் தமுமுக & மமக மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு






தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி புதுக்கோட்டை(கிழக்கு) மாவட்ட புதிய அலுவலகம் அறந்தாங்கியில்  17.03.2021 புதன்கிழமை 
மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது .




மாவட்ட பொறுப்பு குழு தலைவர் B.சேக் தாவூதீன் தலைமை தாங்கினார்.பொறுப்பு குழு உறுப்பினர் MSK முகம்மது சாலிகு  முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் அபுசாலிகு ,ஜகுபர் அலி, கிரின் முகம்மது, அஜ்மல் கான்,அப்துல் ஜலீல்,ஜலீல் அப்பாஸ்,நவாஸ்கான் ஆகியேர் முன்னிலை வகித்தனர். மாநில மீணவரணி செயலாளர் ஜெகதை செய்யது அலுவலகத்தை திறந்து வைத்தார் இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் அஜ்மல் கான் ஆவுடையார்கோவில் ,அறந்தாங்கி, மணமேல்குடி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
அறந்தாங்கி நகர நிர்வாகிகள் சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.






தகவல்

தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments