வங்கிகளுக்கு வரும் 27-ம் தேதிமுதல் ஏப்.4-ம் தேதி வரை 7 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தொடர்பாக வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பொதுத் துறை மற்றும் தனியார்வங்கிகள், வரும் 27-ம் தேதி முதல்ஏப்.4-ம் தேதி வரையிலான 9 நாட்களில், 2 நாட்கள் மட்டுமே செயல்படும். மற்ற நாட்கள் விடுமுறை என சமூகவலை தளங்களில்செய்தி பரவி வருகிறது.
இதன்படி, வரும் 27-ம் தேதி 4-வது சனிக்கிழமை, 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 29-ம் தேதி ஹோலி பண்டிகை, 31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாள், ஏப்.1-ம்தேதி வங்கிக் கணக்கு முடிக்கும் நாள், ஏப்.2-ம் தேதி புனித வெள்ளிமற்றும் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறை என தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி வரும் 27-ம் தேதிமுதல் ஏப். 4-ம் தேதி வரையிலான 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்று கூறப்படுகிறது.
ஹோலி விடுமுறை இல்லை
இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, “வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். 29-ம் தேதி ஹோலிபண்டிகைக்கு விடுமுறை கிடையாது. வடமாநிலங்களில்தான் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாளன்றும் விடுமுறை கிடையாது.
ஏப்.1-ம் தேதி வங்கிக் கணக்கு முடிக்கும் தினத்தன்றும், 2-ம் தேதி புனிதவெள்ளியை முன்னிட்டும் வங்கிகளுக்கு விடுமுறை. 3-ம் தேதி, முதல் சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். மறுநாள் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகும்.
எனவே, சமூக வலைதளங் களில் பரவுவதைப் போல வங்கிகளுக்கு 7 நாள் விடுமுறை என்ற தகவல் தவறானது’’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.