புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் உமாமகேஸ்வரி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த வாகனத்தில் பெரிய அளவிலான மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் வருகிற 6-ந் தேதி நடைபெறும் தேர்தலில் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.