'மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பப்படும் தபால்களில் அனுப்புனரின் பெயர் முகவரியை எழுத கட்டாயப்படுத்த வேண்டாம்' என தபால் பதிவு ஊழியர்களுக்கு அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது.
'பொதுநலன் சார்ந்த புகார்' என்று கடித உறையின் மேல் தலைப்பிட்டு அனுப்பப்படும் தபால் களை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இதன் படி 'மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு கமிஷனருக்கு அனுப்பப்படும் புகார் தொடர்பான பதிவு அல்லது விரைவு தபால்களை அனுப்புனரின் பெயர் முகவரி அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியின்றி பதிவு செய்யலாம்.
'இந்த புகார் தபால்களை பதிவு செய்யும்போது அனுப்புனரின் தகவல்களை கட்டாயமாக எழுத ஊழியர்கள் நிர்பந்திக்க வேண்டாம். தபால்களை சாப்ட்வேரில் பதிவு செய்யும்போது அனுப்புனரின் பெயர் முகவரிக்கான பகுதியில் பொதுநலன் சார்ந்த தகவல் உள்ள தபால் என்பதை 'பி.ஐ.டி.பி.ஐ.' என பதிவிட வேண்டும்' என அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.