இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு: சிங்கப்பூர் அறிவிப்பு




இந்தியாவில்  இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கூடுதலாக 7 நாட்கள்  தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் சுகாதாரத்துறை  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ வரும் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பிரத்யேக மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் கூடுதலாக 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 


ஏற்கனவே பிரத்யேக மையங்களில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். பிரத்யேக மையங்களில் 14-ஆம் நாளில் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.  பின்னர் வீட்டுத்தனிமை முடியும் நாளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிங்கப்பூர் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments