கரோனா தொற்று இல்லாத வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி அளிக்கப்படும் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரி வித்தார்.
புதுக்கோட்டை அரசு பிற்படுத் தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை நேற்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறி யது: புதுக்கோட்டை மாவட்டத் தில் கரோனா தொற்று விகிதம் 3.7 சதவீதமாக உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. கரோனா தொற்றா ளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்டத்தில் 1,529 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
மேலும், புதுக்கோட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி,100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதேபோல, அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தபின், மீண்டும் அங்கு கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர், முகவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக் கும் நாளை(ஏப்.24) கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இதைத்தொடர்ந்து, இவர்கள் அனைவருக்கும் ஏப். 28-ம் தேதி முதல் ஏப்.30-ம் தேதி வரை ஆர்டிபிசிஆர் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில், கரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், கோட்டாட்சியர் டெய்சிகுமார், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.