பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாமா வேண்டாமா என்பது வாட்ஸ்அப் பயனர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலான செல்போன் பயனர்கள் தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் செயலி இல்லாத செல்போனே இல்லை எனலாம். அந்த அளவிற்கு வாட்ஸ் அப் செயலி மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப் பயனர்களிடையே இந்த செயலி பற்றிய ஒரு புதிய வதந்தி பரவி வருகிறது. அதாவது பிங்க் நிறத்தில் புதியதாக வாட்ஸ்அப் அறிமுகம் ஆகியுள்ளதாகவும், இந்த செயலி பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதாகவும் செய்தி கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் குரூப்புகளில் வலம் வந்துகொண்டுள்ளது. ஆனால் இதுபற்றி வாட்ஸ்அப் நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இதுபற்றி பேசிய சைபர் க்ரைம் செக்யூரிட்டி போலிஸ் ராஜஹாரியா, பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியின் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுபற்றி பேசிய சைபர் க்ரைம் போலிசார் இந்த செயலியை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் ந்ச்சரிட்த்துள்ளனர். இதன்மூலம் செல்போன் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியானது மிகவும் ஆபத்தானது என்பதும், இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்தால் செல்போனில் உள்ள அனைத்து தகவல்களும் ஹேக் செய்யப்படும் என்பதும் தெரியவந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.