புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் மாணவிகள் மற்றும் தாய்மார்களுக்கான மார்க்கக் கல்வி மற்றும் குர்ஆன் வகுப்புகள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.
பெண்களின் மார்க்க கல்வியின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த மதரஸாவில் நான்கு முக்கிய பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு:
வகுப்புகளின் கால அட்டவணை:
ஜும்ரா வகுப்பு: காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறுகிறது. இவ்வகுப்பில் தற்போது 40 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
காரிஆ வகுப்பு: இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. முதலாவதாக காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், மீண்டும் காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறும்.இதில் தற்போது 23 பெண்கள் பயின்று வருகின்றனர்.
ஹாபீழா வகுப்பு: திருக்குர்ஆனை மனனம் செய்யும் இந்த வகுப்பானது காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெறுகிறது.இதில் தற்போது 10 பெண்கள் பயின்று வருகின்றனர்.
குர்ஆன் நளிரா வகுப்பு: குர்ஆன் ஓதும் பயிற்சியை உள்ளடக்கிய இவ்வகுப்பு காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறுகிறது. இதில் தற்போது 6 தாய்மார்கள் பயின்று வருகின்றனர்.
மதரஸாவின் இச்சீரிய முயற்சியால் இப்பகுதி மாணவிகள், தாய்மார்கள் உரிய மார்க்க அறிவைப் பெற்றுத் திகழ்கின்றனர். சிறந்த முறையில் கல்வியளிக்கும் மதரஸா நிர்வாகத்தை மக்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
இது சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு ரஹ்மானியா பெண்கள் மதரசாவை தொடர்பு கொள்ளவும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.