திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை ரத்து




கொரோனா ஊரடங்கின் போது வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்படி, திருச்சியில் இருந்தும் கோலாலம்பூருக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

கடந்த 25-ந்தேதி முதல் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து வந்து செல்ல அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. இதனால் திருச்சியில் இருந்து துபாய், சார்ஜா, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட்ட சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்தநிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு இயக்கப்படும் விமானங்கள் நேற்று முதல் மறுஅறிவிப்பு வரும்வரை இயக்கப்பட மாட்டாது என்று மலேசிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாக அந்த விமானங்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments