கோபாலப்பட்டிணத்தில் 2021 ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு






புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்திலஇந்த வருடம் (2021) ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படுள்ளது.

அந்த வகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எந்த இடத்தில் தராவீஹ் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்படுள்ளது

ஆண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :

கோபாலப்பட்டிணத்தில் ஆண்களுக்கு 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.

* ஜீம்ஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் (மக்கா தெரு)

* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)

* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)

* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )

பெண்களுக்கு தொழுகை நடைபெறும் இடங்கள் :

கோபாலப்பட்டிணத்தில் 
பெண்களுக்கு 4 இடங்களில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது.

* தங்கமஹால் மண்டபம் (அரஃபா தெரு)

* காட்டுக்குளம் பள்ளிவாசல் (மதீனா தெரு)

* அவுலியா நகர் பள்ளிவாசல் (அவுலியா நகர்)

* கடற்கரை பள்ளிவாசல் (மக்கா தெரு )

இஷா & தராவிஹ் நேரங்கள்

பாங்கு  :  7.48 PM 
இகாமத்  :8:10 PM (ரமலானிற்கு முன்பு வரை)

ரமலான் பிறை 1 முதல்
இஷா இகாமத்:

8:15 PM (தங்கமஹால் மண்டபம் - பெண்களுக்கு)

8.30 PM (அனைத்து பள்ளிவாசல்) 

ரமலான் பிறை 1முதல் இஷா சுன்னத் தொழுகைக்கு பிறகு அனைத்து இடங்களிலும் தராவீஹ் உடனே ஆரம்பமாகிவிடும். 

ரமலான் மாதம் முடியும் வரை இஷா இகாமத் & தராவீஹ் நேரத்தில் மாற்றம் இல்லை என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம். 

 ரமலான் மாதம் தொழுகை & நோன்பு பற்றிய திருக்குர்ஆன் வசனம் & ஹதீஸ்

 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
(அல்குர்ஆன் : 2:183)

”நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
(புஹாரி: 37, முஸ்லிம்: 759-173)

குறிப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக  கொரோனா இரண்டாம் அலை  தாக்கம் அதிகரித்து வருகிறது ஆகவே பொதுமக்கள்

முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள்

போதுமான சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்

முடிந்த அளவு வீட்டிலேயே ஒழு செய்துகொள்ளுங்கள்

தொழுகை முடிந்த பிறகு  வீட்டிற்குள் நுழையும் முன் கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள்

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் பள்ளிவாசலுக்கு அழைத்து வருவதை தவிர்த்து கொள்ளுங்கள்

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக :

உஸ்மான் ஆலிம் அவர்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments