கொரொனா பெருநோய் தொற்றின் இரண்டாம் கட்ட பரவலை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்திருந்த வழிபாட்டு தலங்களுக்கான இரவு 8 மணி வரையான அனுமதியை முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று இரவு 10 மணி வரை நீட்டித்து தந்த தமிழக அரசுக்கு தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.
கண்ணியமிகு ஆலிம்களும் ஜமாஅத் நிர்வாகிகளும் தராவீஹ் தொழுகைக்கான வழக்கமான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் நோய் தொற்று பரவலை கவனத்தில் கொண்டு
முகக் கவசம் அணிவது
போதுமான இடைவெளியை கடைபிடிப்பது
வீட்டிலேயே ஒழு செய்துகொள்ள அறிவுறுத்துவது
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தவிர்க்க கூறுவது
உள்ளிட்ட அரசு அறிவித்திருக்கிற எச்சரிக்கைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அன்புடன் கேட்டுகொள்கிறது.
இரவு 10 மணி வரை அரசு அனுமதித்திருந்தாலும் கூட இஷா-விற்கான நேரம் வந்ததும் பாங்கு சொல்லி விரைவாக இஷா மற்றும் தராவீஹ் தொழுகையை நடத்தி முடித்துவிடுமாறும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுகொள்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.