புதுக்கோட்டை கீழ 2-ம் வீதியில் நேற்று ஒரு லாரியின் அடிப்பகுதியில் கன்றுக்குட்டி ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால் அந்த கன்றுக்குட்டிவெளியே வரமுடியாமல் தவித்தது. இதனை கண்ட தாய்பசு செய்வதறியாமல் லாரியை சுற்றி சுற்றி வந்தது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த கன்றுக்குட்டியினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தாய் பசு, அவர்களை நோக்கி முட்ட வந்தது. இதனால் அவர்கள் அலறி அடித்து ஓடினர். லாரியின் அடியில் இருந்து கன்றுக்குட்டி வெளியே வர முயற்சித்தும் முடியவில்லை. தலைப்பகுதி மட்டும் வெளியே வந்தது. ஆனால் உடல் முழுவதும் வரமுடியவில்லை. இதனால் தாய் பசுவை சற்று தூரம் விரட்டி விட்டு கன்றுக்குட்டியை மீட்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். பின்னர் லாரியின் அடிப்பகுதியில் சிக்கிய கன்றுக்குட்டியின் கால்களை மடக்கி வெளியே இழுத்து காப்பாற்றினர். துள்ளிக்குதித்து ஓடி வந்து தாய் பசு அருகே அந்த கன்றுக்குட்டி நின்றது. குட்டியை தாய் பசு தழுவி அரவணைத்து அழைத்து சென்றது. கன்றுக்குட்டியை மீட்க தாய் பசு பாசப்போராட்டம் நடத்தியதை கண்டு பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.