பாஸ்போர்ட்டு அலுவலகங்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வருகிற 31-ந் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ளது. திருச்சியில் சாஸ்திரி சாலையில் கோகினூர் தியேட்டர் அருகிலும், தஞ்சாவூரிலும் தலா ஒரு பாஸ்போர்ட்டு சேவை மையம் உள்ளன. இது தவிர 5 தபால் நிலையங்களில் அஞ்சலக பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் வசதி உள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. இதன் காரணமாக கடந்த 10-ந் தேதியிலிருந்து நேற்று வரை பாஸ்போர்ட்டு அலுவலகம், மற்றும் சேவை மையங்கள் தபால் நிலைய சேவை மையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது தமிழக அரசு மே 24-ந் தேதி (இன்று) முதல் 31-ந் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக திருச்சி மண்டலத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட்டு சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் ஆகிய அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை இயங்காது என்று திருச்சி மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி ஆர்.ஆனந்த் அறிவித்து உள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.