கோபாலப்பட்டிணத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே கொளுத்திய வெயில்: பொதுமக்கள் கடும் அவதி!!



தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் மே 4 முதல் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை போட்டு தாக்கி வருகிறது. வேறு ஒரு பக்கம் கோடை வெயிலும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் மே 4 முதல்  தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை 25  நாட்கள் நீடிக்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயில் 110 டிகிரியைக்கூட எட்ட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கத்திரி வெயிலின் முதல் நாளான நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்ததோடு, கடந்த ஒரு மாதமாக வெயில் கொளுத்தி வருகிறது. அவ்வேப்போது கோடை மழை பெய்கிறது.

கடந்த சில நாட்களாகவே கோபாலப்பட்டிணத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் உக்கிரம் அனலாக கொதித்தது. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களின் முகத்தில் அனல் காற்று வீசியது. 

வெயிலின் காரணமாக மக்கள் பெரும்பாலும் காலை நேரங்களில் வெளியில் செல்வதையே தவிர்த்து வருகின்றனர். 

வெயிலின் உக்கிரத்தில் தப்பிக்க, தங்களை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை பொதுமக்கள் சாப்பிட தொடங்கி உள்ளனர்.

இந்த அக்னி வெய்யிலின் தாகத்தை குறைக்க பொதுமக்கள் தண்ணிர், மோர், தர்பூசணிப் பழம், போன்ற உடலுக்கு குளிர்ச்சியான ஆகாரங்களை அதிமாக சேர்த்துக் கொண்டால் உடல் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் எதிப்பு சக்தி இருக்கும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments