புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க கூடுதலாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா நோயாளிகளுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்குள்ள ஐசியூ மற்றும் பிற வார்டுகளில் உள்ள 558 ஆக்சிஜன் படுக்கைகளும் கடந்த 2 நாட்களுக்கும் முன்பே நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் காலி படுக்கைகள் இல்லாத சூழலில், இருப்பதாக அரசு இணையதளத்தில் தெரிவித்து வருவதால் பிற இடங்களில் இருந்து வந்து ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர்.
இதேபோன்று, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களும் சிகிச்சை பலனின்றி அதிக எண்ணிக்கையில் இறக்கின்றனர்.
கூடுதல் ஆக்சிஜன் வழங்குமாறு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அண்மையில் கோரிக்கை தெரிவித்தனர். ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியும் அரசுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறார். எனினும், இப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை.
இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலர் ஒருவர் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஆக்சிஜன் டாங்க் உள்ளது. இதில், நாளொன்றுக்கு குறைந்தது 5,000 லிட்டர் தேவையுள்ள நிலையில், 2,500 லிட்டர்தான் ஆக்சிஜன் கிடைக்கிறது.
அதோடு, ஆக்சிஜன் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இருப்பதைக்கொண்டு பெரும் முயற்சியோடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், ஆக்சிஜன் இணைப்பு உள்ளிட்ட வசதியுடன்கூடிய படுக்கைகள் கூடுதலாக உள்ளன. அதைத்தான் இணையதளத்திலும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஆக்சிஜன்தான் பற்றாக்குறை உள்ளது" என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.