கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு






இன்று (மே 26)  கோபாலப்பட்டிணம்  பெரியபள்ளிவாசல் வளாகத்தில் 2 மணி முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள   கோபாலப்பட்டிணத்தில்
இன்று மே 26 புதன்கிழமை 2 மணி முதல் பெரியபள்ளிவாசல் வளாகத்தில் 18 வயது முதல் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது.

தடுப்பூசி போட வருபவர்கள் அவர்களின் ஆதார் அட்டையை கொண்டு வரும்படி கேட்டுகொள்கிறார்கள்.

குறிப்பு:

இன்று தடுப்பூசி முகாமில் உங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஆகையால் உங்கள்
ஆதார் அட்டையை கொண்டு சென்று நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்லாம்

கொரோனா என்னும் இந்தக் கொடிய வைரஸ் நோய் தொற்று வராமல் இருக்க முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்து கொள்ளுங்கள்.  மக்கள் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments