இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்; வானில் தோன்றும் ரத்த நிலா






இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்; வானில் தோன்றும் ரத்த நிலா! இந்தியாவில் சில பகுதிகளில் காணலாம்

இந்த ஆண்டின், முதல் சந்திர கிரகணம் இன்று (மே 26) நிகழ்கிறது. கிரகண நேரத்தில் பெரிய நிலா அதாவது, 'சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்' எனப்படும், ரத்த நிலா தோன்றும் வானியல் நிகழ்வும் நடக்கிறது.

சந்திர கிரகணம்சூரிய ஒளியை தான் நிலவு பிரதிபலிக்கிறது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்து விடுகிறது. பூமியின் நிழல் தான், நிலவில் படுகிறது.

சூப்பர் மூன்

பூமி - நிலவு இடையேயான சராசரி தொலைவானது, 3.84 லட்சம் கி.மீ., விட குறைவாக இருக்கும் போது, 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது, சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும், நிலவு தெரியும்.சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வர, 365.26 நாளாகிறது. நிலவு ஒரு முறை பூமியைச் சுற்ற, 29.32 நாளாகும். இக்கணக்கீட்டு முறையில் பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் நிலவும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, 'சூப்பர் மூன்' தோன்றுகிறது.

ரத்த நிலா

'சூப்பர் மூன்' ஏற்படும் போது, நிலவானது பூமிக்கு அருகில் வருவதால், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுகிறது. இதனால், அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால், 'ஆரஞ்சு' முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இது, 'ரத்த நிலா' எனப்படுகிறது.

எங்கு, எப்போது

இன்று மதியம், 3:15 முதல் மாலை, 6:23 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறும். மாலை, 4:39 முதல், 4:58 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். இந்தியாவில், மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் ஒடிசா, அந்தமான் நிக்கோபர் தீவின் கடலோர பகுதிகளில், பாதி சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிரகணம், பெரிய நிலா, ரத்த நிலா மூன்றையும் பார்க்கும் வாய்ப்பு இல்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...





Post a Comment

0 Comments