கடந்த ஆண்டு முதல் அலையை காட்டிலும் தற்போது உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு கொரோனா உருமாறி மிகவும் சக்தி வாய்ந்த வைரஸாக மாறியிருப்பதே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு ஆளாவது மட்டுமின்றி உயிரிழப்புகளையும் சந்திக்கின்றனர்.
எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் போதிய அளவில் இருப்பு இல்லாத காரணத்தால் இந்த திட்டம் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை.
அதேசமயம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தடுப்பூசி செலுத்தி கொள்ள இளைஞர்கள் முன்வந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய சூழலில் தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருக்கிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மே.26 இன்று புதன்கிழமை 24 பேர் கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.... மேலும் மக்களிடையே கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்...
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.