கொரோனா ஊரடங்கின் காரணமாக பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 2-ம் கட்ட நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தொடங்கியது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள நியாயவிலைக்கடை மற்றும் காட்டுகுளம் தெருவில் உள்ள நியாயவிலைக்கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 2-ம் கட்ட நிவாரண தொகை ரூ.2 ஆயிரத்தை மீமிசல் கூட்டுறவு சங்க தலைவர் உதயம் J.தாஹீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சுப்ரமணியன் மீமிசல் கூட்டுறவு சங்க துணைத்தலைவர், A.பாரூக் அலி திமுக ஒன்றிய பிரதிநிதி, காதர் பாட்சா திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதி, V.M.A. அப்துல் காதர் கோபாலப்பட்டிணம் திமுக கிளை பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வந்து பொருட்களையும், நிவாரணத்தொகையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கோபாலப்பட்டிணத்திற்கு வராததால் வழங்கப்படவில்லை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.