சரக்கு வாகன ஓட்டுனரிடம் ரூ. 50 லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜவகர். இவர் நத்தம் மதுரை சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்ட கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது . இதை தடுத்து நிறுத்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜவகர் ஓட்டுநரிடம் உரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கூறியுள்ளார். இதன் பின்னர் காய்கறி வாகன ஓட்டுனரிடம் ரூபாய் 50 லஞ்சமாக அவர் பெற்றுள்ளார். இதை வேனில் வந்த சில நபர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியது.
இந்நிலையில் திண்டுக்கல் பரளிப்புதூர் சோதனைச் சாவடியில் ரூ.50 லஞ்சம் வாங்கிய நத்தம் எஸ்.எஸ்.இ ஜவகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சரக்கு வாகன ஓட்டுனரிடம் ரூ. 50 லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலானதால் எஸ்.பி. ரவளி பிரியா ஜவகரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.