புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை!



ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.

அதன்படி இந்த வருடமும் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க மீன்வளத் துறையினரால் தடை விதிக்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மீன்பிடித் தடைக்காலம் நிவாரணமாக ஆண்டுதோறும் அரசு மீனவர்கள் வங்கி கணக்கில் தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் இந்த வருடமும் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினராக சேர்ந்த மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்காமல் இருந்து வருகிறது. கட்டுமாவடி முதல் ஏனாதி வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 5 வருடங்களாக நிவாரணத் தொகை பெற அரசுக்கு மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. 

ஆகையால் மீனவர்களின் நலன் கருதி புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments