ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
அதன்படி இந்த வருடமும் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க மீன்வளத் துறையினரால் தடை விதிக்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மீன்பிடித் தடைக்காலம் நிவாரணமாக ஆண்டுதோறும் அரசு மீனவர்கள் வங்கி கணக்கில் தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் இந்த வருடமும் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினராக சேர்ந்த மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்காமல் இருந்து வருகிறது. கட்டுமாவடி முதல் ஏனாதி வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 5 வருடங்களாக நிவாரணத் தொகை பெற அரசுக்கு மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
ஆகையால் மீனவர்களின் நலன் கருதி புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.