புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காமராஜ்நகர் அருகே பெருமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் ஹரிகரன் (வயது 14). இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தானியங்கி கிடங்கு அருகே கதிர் அறுக்கும் எந்திரம் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதன் அருகே ராஜமாணிக்கம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்று கொண்டு இருந்தார். அவரது மகன் ஹரிகரன் பின்னால் உட்கார்ந்து இருந்தார். இவர்கள் நிற்பதை கவனிக்காமல் பெருமருதூர் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் (32) என்பவர் கதிர் அறுக்கும் எந்திரத்தை இயக்கினார்.
அப்போது, மோட்டார் சைக்கிள் மீது கதிர் அறுக்கும் எந்திரம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த ஹரிகரன் கீழே விழுந்தான். இதனிடையே அவனது தலையில் கதிர் அறுக்கும் எந்திரத்தின் சக்கரம் ஏறியதில் தந்தையின் கண்முன்னே ஹரிகரன் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.