கொரோனா வைரசுக்கு புதுக்கோட்டையில் 4 மாத குழந்தை ஒன்று பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்த கொரோனாவின் இரண்டாவது அலைக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.
இதுவரை 25,665 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில வாரங்களாக தினசரி உயிரிழப்பு 450-ஐ கடந்து பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டோர் அதிகம் பலியாகி வருவது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
இந்தநிலையில் புதுக்கோட்டையில் 4 மாத குழந்தை ஒன்று பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள மந்த குடிப்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 4 மாத குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை கடந்த மாதம் 27-ந்தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையை பரிசோதித்ததில் 29-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 4 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மிகக்குறைந்த வயதில் கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.