கோபாலப்பட்டிணத்தில் திடீரென மழை! பொதுமக்கள் மகிழ்ச்சி!!



கோபாலப்பட்டிணம் பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று ஜூன் 23 பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஜூன் 23 மாலை வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று லேசாக வீசின.

திடீரென இரவில் 8 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் விட்டு விட்டு பெய்தது. இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments