புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல் வழியான சட்டவிரோத செயல்களை தடுக்க மீனவர்களின் பங்கு முக்கியமானது என போலீஸ் சூப்பிரண்டு நிஷா பாா்த்திபன் தெரிவித்தார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமை தாங்கினார்.
இதில், கடலோர பாதுகாப்பு குழுமம், வனத்துறையினர், மீன்வளத்துறையினர், போதைபொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவினர், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடல் வழியான சட்டவிரோத செயல்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பேசுகையில், கடலில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் மீனவர்களின் பங்கு முக்கியமானது. சட்டவிரோத செயல்கள் குறித்து தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.