கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரையப்பட்டு வரும் ஓவியங்கள் காண்போருக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவிவரும் நிலையில், புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் தேவையின்றி சுற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதுக்கோட்டை நகராட்சி மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா சார்பில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு கொரோன விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
அந்த ஓவியத்தில் கொரோன வைரஸ் உருவம் மற்றும் முன்கள பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களின் சேவையை போற்றும் விதத்தில் வரையப்பட்டுள்ள காட்சிகள் காண்போரை கவர்ந்துள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தத்துரூபமாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.