அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டுநவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அந்த தேர்வுகள் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இணையவழியில் நடத்தப்பட்டன.
அப்போது, தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக வளாகக் கல்லூரியில் பயிலும் பல மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் மே 3-ம் தேதிமறுதேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கிடையே கொரோனாபாதிப்பு மீண்டும் அதிகரித்ததாலும், ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியதாலும் மறுதேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், வளாக கல்லூரிகளுக்கான மறுதேர்வு மே 17-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல கடந்த பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் மே 17-ம்தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
இந்நிலையில், பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.
வரும் 14-ம் தேதி முதல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் 21-ம் தேதி முதல் நடைபெறும். அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 17ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் மறு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.