SDPI கட்சியின் 13ம் ஆண்டு துவக்க விழா: புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்த SDPI கட்சியினர்!!



SDPI கட்சியின் 13 ஆவது ஆண்டு துவக்க விழா இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வெகு சிறப்பாக கட்சியினரால் கொண்டாடப்பட்டது.

2009 ஜூன் 26-ஆம் நாள் துவங்கப்பட்ட எஸ்டிபிஐ கட்சி இன்றுடன் 12 ஆண்டுகள் தங்கள் மக்கள் சேவையினை செம்மையாக செய்து 13-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

இதை கொண்டாடும் வகையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நகர கிளை அலுவலகங்களிலும் மற்றும் அனைத்து இடங்களில் உள்ள SDPI கொடி கம்பத்திலும் SDPI-யின் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு கோசங்கள் போடப்பட்டது. 

குறிப்பாக மாவட்டத்தின் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் கபசுரக் குடிநீர், காய்கறி சூப் வகைகள், உணவு பொட்டலங்கள், முகக் கவசம் மற்றும் கையுறைகள், மரக்கன்றுகள், இனிப்பு வகைகள் என பல்வேறு வகையான மக்கள் நல திட்ட உதவிகளை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் வழங்கினர். 





தகவல்:
மாவட்ட சமூக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு  மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments