கோட்டைப்பட்டிணத்தில் மழைநீர் சேகரிப்பு குழுமம் ,திப்புசுல்தான் இளைஞர் பேரவை மற்றும் ஊர் தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது




கோட்டைப்பட்டிணத்தில் மழைநீர் சேகரிப்பு குழுமம் ,திப்புசுல்தான் இளைஞர் பேரவை மற்றும் ஊர் தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோட்டைப்பட்டினத்தில் மழைநீர் சேகரிப்பு குழுமம் ,திப்புசுல்தான் இளைஞர் பேரவை மற்றும் ஊர் தன்னார்வ இளைஞர்கள் இனைந்து 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கோட்டைப்பட்டினம் சங்கம் ஆலமரம் பள்ளி வளாகத்தில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது.





இதில் மழைநீர் சேகரிப்பு குழுமம் ,திப்புசுல்தான் இளைஞர் பேரவை மற்றும் ஊர் தன்னார்வ இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகளை விதைத்தனர்.

ஒரு சில ஊர்களில் உள்ள இளைஞர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் இந்த காலகட்டத்தில் ஊர் நலனை கருத்தில் கொண்டு  சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட செயல்படும் கோட்டைப்பட்டிணம் 
மழைநீர் சேகரிப்பு குழுமம் ,திப்புசுல்தான் இளைஞர் பேரவை மற்றும் ஊர் தன்னார்வ இளைஞர்களுக்கு GPM மீடியா சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments