ஆகஸ்ட் இறுதியில் கரோனா மூன்றாவது அலை தாக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Medical Research) எச்சரித்துள்ளது.
கரோனா இரண்டாவது அலை இந்தியாவில் கோரத் தாண்டவம் ஆடிய நிலையில், மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பிவருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் இறுதியில் கரோனா மூன்றாவது அலை தாக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின், தொற்று நோய்ப் பிரிவுத் தலைவர் மருத்துவர் சமீரன் பாண்டா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
அவருடைய பேட்டியின் விவரம் பின்வருமாறு:
"இந்தியாவில் மூன்றாவது அலை கரோனா பாதிப்பு ஏற்படலாம். ஆகஸ்ட் இறுதியில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இரண்டாவது அலைபோல் கொடூரமான தாக்கம் இல்லாமல் போகலாம்.
கரோனா 4வது அலை ஏற்பட்டால் அதற்கு 4 விஷயங்கள் தான் காரணமாக இருக்க முடியும். முதலில் முதல் மற்றும் இரண்டாவது அலையில்
ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறையலாம். இரண்டாவதாக, புதிய உருமாறிய திரிபுகள் கரோனா நோய் எதிர்ப்புக்கு சவால் விடுக்கலாம். மூன்றாவதாக, புதிய வகை வைரஸால் நமக்கு ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பை அசைக்க முடியாததால் பரவலின் வீரியத்தை மட்டும் அதிகரிக்கலாம். நான்காவதாக ஊரடங்கில் மாநில அரசுகள் முன்கூட்டியே தளர்வுகளை அறிவிக்குமானால் அது புதிய தொற்றுகளுக்கு வழிவகுக்கலாம்"
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "டெல்டா, டெல்டா பிளஸ் ஆகிய இரண்டு திரிபுகளுமே நாட்டில் பரவலாக காணப்படுகின்றன. ஆனால், அவை பெரிய அளவில் பொது சுகாதாரத்துக்கு சவால் விடுத்ததாக எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.
முன்னதாக ஐஎம்ஏ மருத்துவக் குழுவானது, "நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றுலா தலங்களில் கூட்டம் குவிந்தி வருகிறது. கோயில் புனித தலங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிகின்றனர். பொது மக்களும் சரி மத்திய, மாநில அரசுகளும் சரி அலட்சியத்துடன் செயல்படுவதாகவே தோன்றுகிறது" எனக் கூறியது கவனிக்கத்தக்கது.
அதேபோல், இன்று காலை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “துரதிர்ஷ்டவசமாக நாம் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. டெல்டா வைரஸ் தற்போது உலகில் 111 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.