குழந்தை திருமணம் செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயும்! கலெக்டர் கவிதா ராமு எச்சரிக்கை!!



புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தை திருமணம் செய்வோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-ன்படி குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை அல்லது ரூ.ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 

இச்சட்டத்தின்கீழ் குழந்தை திருமணத்தை நடத்தியவர், மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார், திருமணத்தை நடத்திவைக்கும் புரோகிதர், மண்டப உரிமையாளர் மற்றும் திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் ஆகிய அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

குழந்தை திருமணம் குறித்த தகவல் அறிந்தால் சைல்டுலைன் இலவச தொலைபேசி எண் 1098, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் 04322-221266 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் 80564 31053 என்ற செல்போன் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments