நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொலைபேசி எண் எழுதப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கடந்த 07.01.2020 அன்று புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது. இந்நிலையில் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் வீட்டு வரி செலுத்த அவ்வப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை புரிகின்றனர். இந்நிலையில் ஒரு சில நேரங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டப்பட்டு எந்த ஒரு தகவலும் இல்லாமல் காணப்படும்.
இதனால் எப்பொழுது திறக்கப்படும் என்ற விடை தெரியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை இருந்து வந்தது. மக்களின் வீண் அலைச்சலை தடுக்கும் விதமாகவும் வீட்டிலிருந்தே பொதுமக்கள் தொலைபேசியின் வாயிலாக புகார்களை தெரிவிக்கும் விதமாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயளாலர் ஆகியோரின் தொலைபேசி எண், தகவல் பலகை மற்றும் புகார் பெட்டி அமைக்க வேண்டி தமுமுக, பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என பல தரப்பினர் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் ஒரு சிலரின் பல கட்ட முயற்சியிலும் அழுத்தத்தின் அடிப்படையிலும் நேற்று 30.06.2021 ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வெளியே பெயிண்ட் கொண்டு ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயளாலர் ஆகியோரின் தொலைபேசி எண் மற்றும் தகவல் பலகை எழுதப்பட்டது. இதனால் பொதுமக்கள் இனி வீண் அலைச்சல் மற்றும் வீட்டிலிருந்தே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதில் நான்காவது வார்டு உறுப்பினரின் தொலைபேசி எண் விடுபட்டுள்ளது. மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படும் நேரம் மற்றும் புகார் பெட்டி அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.