புதுக்கோட்டை பெரியார் நகரில், இரண்டு மாடி வீடு ஒன்றை தரை மட்டத்தில் இருந்து.4 அடிக்கு உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜாக்கிகளைக் கொண்டு ஒவ்வொரு அடியாக கட்டடம் உயர்த்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை பெரியார் நகரில், செந்தில்குமார் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளது. அந்த வீட்டை 4 அடி வரை உயர்த்தும் பணிகள் தற்போது நடந்துவருகின்றன. வீட்டை 250 ஜாக்கிகள் மூலம் உயர்த்தி அதன் மட்டம் உயர்த்தப்படுகிறது. மழைக்காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகும் சூழல் காரணமாக வீட்டு உரிமையாளரின் விருப்பப்படி கட்டடம் இருந்த இடத்தில் இருந்து அப்படியே உயர்த்தப்பட்டுவருகிறது.
பழைய வீட்டை இடித்து புதிதாக கட்டினால் 80 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும்நிலையில், இவ்விதம் உயர்த்தப்படுவதால் நான்கரை லட்சம் ரூபாயில் முடிந்துவிடும் என்று இந்நிறுவனத்தினர் கூறுகிறார்கள். கடந்த 20 நாட்களாக நடந்துவரும் பணிகள் இன்னும் ஒருவாரத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக சாலை போடும்போதே பழைய சாலையை சுரண்டி எடுத்துவிட்டு புதிதாக சாலை அமைத்தால், காலப்போக்கில் வீடுகளின் மட்டம் கீழே போகும் நிலை ஏற்படாது. அண்மையில் தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இதனை குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.