புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கவிதா ராமு, மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பொன்னமராவதி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். மேலும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆய்வு செய்து விட்டு அப்பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 சிறுவர்கள் சாலையில் காலணி இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த மாவட்ட கலெக்டர், அந்த 2 சிறுவர்களையும் அழைத்து பேசினார். அவர்களிடம் என்ன படிக்கிறீர்கள்?, உங்களுக்கு எந்த ஊர்? என்று பாசத்துடன் கேட்டு, காலணி இல்லாமல் எங்கு நடந்து போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். பின்னர் அந்த 2 சிறுவர்களுக்கும் பணம் கொடுத்து, காலணியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
மாவட்ட கலெக்டரின் இந்த செயல் அங்கு இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.