புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி உட்கோட்டங்களில் உள்ள புதுக்கோட்டை நகர காவல் நிலையம், திருக்கோகர்ணம் காவல் நிலையம், கணேஷ்நகர் காவல் நிலையம் மற்றும் அறந்தாங்கி காவல் நிலைய சரகங்களில் உரிமம் கோரப்படாத கேட்பார் அற்ற நிலையில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வானங்கள் உள்ளன.
அதன்படி, புதுக்கோட்டை உட்கோட்ட காவல் நிலையங்களில் 154 இருசக்கர வாகனங்களும், 3 மூன்று சக்கர வாகனங்களும், 3 நான்கு சர வாகனங்கள் மற்றும் ஒரு லாரியும் உள்ளது. மேலும் அறந்தாங்கி உட்கோட்ட காவல் நிலையங்களில் 69 இருசக்கர வாகனங்களும், ஒரு நான்கு சர வாகனமும் உள்ளது. இவை அனைத்தும் குற்றவிசாரணை முறைச்சட்டம் பிரிவு 102 மற்றும் கிரிமினல் குற்றம் சார்ந்த வழக்குகளில் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வாகனங்களுக்கான உரிய உரிமைதாரர்கள் அந்த காவல் நிலையத்திற்கு சென்று, உரிய ஆவணங்களை காண்பித்து 15 தினங்களுக்குள் மீட்டுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு 15 தினங்களுக்கும் மேலாக உரிமம் கோரப்படாத வாகனங்கள், பொது ஏலம் விடப்பட்டு அதில் கிடைக்கபெறும் தொகையானது அரசு கணக்கில் செலுத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.